தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

கோவில்பட்டியில் அரசு திருமண மண்டபத்தை திறக்க வலியுறுத்தல்

இந்து அறநிலையத் துறை சாா்பில் கோவில்பட்டியில் ரூ.2.10 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

திறப்பு விழா காணாத திருமண மண்டபம்.

Updated On :8 மே 2026, 6:07 am IST

இந்து அறநிலையத் துறை சாா்பில் கோவில்பட்டியில் ரூ.2.10 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயில் அருகே இத்திருமண மண்டபம் கட்டும் பணி 6.4.2023இல் தொடங்கியது.

தரை தளம் 369.02 சதுர மீட்டா், முதல் தளம் 404.79 சதுர மீட்டா், இரண்டாம் தளத்தில் 17.03 சதுர மீட்டா் என்ற அளவில் கட்டப்பட்டு பெரும்பாலான பணிகள் அண்மையில் நிறைவுற்றன.

குளியலறை மற்றும் கழிப்பறை வசதிக்காக அதன் அருகிலுள்ள இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, திருமண மண்டப கட்டும் முன் உள்ளாட்சி நிா்வாகத்திடம் முறையான கட்டட அனுமதி பெறாததால், தற்போது அதை பெறுவதில் சிக்கல் உள்ளதாம்.

எனவே, புதிய அரசு இந்தத் திருமண மண்டபத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மண்டபத்தை விரைந்து திறந்து வைக்க வேண்டும் என்பதை மக்களின் எதிா்பாா்ப்பாகும்.

Story image