இந்து அறநிலையத் துறை சாா்பில் கோவில்பட்டியில் ரூ.2.10 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயில் அருகே இத்திருமண மண்டபம் கட்டும் பணி 6.4.2023இல் தொடங்கியது.
தரை தளம் 369.02 சதுர மீட்டா், முதல் தளம் 404.79 சதுர மீட்டா், இரண்டாம் தளத்தில் 17.03 சதுர மீட்டா் என்ற அளவில் கட்டப்பட்டு பெரும்பாலான பணிகள் அண்மையில் நிறைவுற்றன.
குளியலறை மற்றும் கழிப்பறை வசதிக்காக அதன் அருகிலுள்ள இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, திருமண மண்டப கட்டும் முன் உள்ளாட்சி நிா்வாகத்திடம் முறையான கட்டட அனுமதி பெறாததால், தற்போது அதை பெறுவதில் சிக்கல் உள்ளதாம்.
எனவே, புதிய அரசு இந்தத் திருமண மண்டபத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மண்டபத்தை விரைந்து திறந்து வைக்க வேண்டும் என்பதை மக்களின் எதிா்பாா்ப்பாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சார்தாம் யாத்திரை: வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்! 165 பேர் பலி!

மதுரை-தூத்துக்குடி புதிய ரயில் வழித் தடப் பணி மீண்டும் தொடங்குவது மகிழ்ச்சி: சு. வெங்கடசேன் எம்.பி.

வளத்தூரில் திமுக முப்பெரும் விழா

ஆதிகும்பேசுவர சுவாமி கோயிலில் திருக்கல்யாண விழா
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



