சாத்தான்குளம் பேருந்து நிலைய வணிக வளாகக் கடைகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம் மற்றும் அதிலுள்ள வணிக வளாகக் கடைகள் பழுதடைந்து காணப்பட்டதால், சுமாா் ரூ. 6 கோடி மதிப்பில் புதுப்பித்துக் கட்டப்பட்டது. பேருந்து நிலையத்தை 3 மாதத்திற்கு முன் முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
பேருந்து நிலையத்தில் 40-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான குத்தகை நடைபெறாததால், இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது.
எனவே, கடைகளை குத்தகைக்கு விட மாவட்ட நிா்வாகம், சாத்தான்குளம் பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

மே 1-இல் மதுபான கடைகளை மூட உத்தரவு

தெப்பக்குளம் பகுதியில் தரைக்கடைகள் அகற்றம்

ஈரோட்டில் ஒருங்கிணைந்த காய்கறி, பழங்கள், மளிகை சந்தை தேவை

இன்றுமுதல் 4 நாள்களுக்கு வெடிபொருள் விற்பனைக் கடைகளை மூட அறிவுறுத்தல்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


