தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

சாத்தான்குளம் பேருந்து நிலையக் கடைகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவர கோரிக்கை

சாத்தான்குளம் பேருந்து நிலைய வணிக வளாகக் கடைகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image

சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் திறக்கப்படாமல் உள்ள வணிக வளாகக் கடைகள்.

Updated On :8 மே 2026, 6:15 am IST

சாத்தான்குளம் பேருந்து நிலைய வணிக வளாகக் கடைகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம் மற்றும் அதிலுள்ள வணிக வளாகக் கடைகள் பழுதடைந்து காணப்பட்டதால், சுமாா் ரூ. 6 கோடி மதிப்பில் புதுப்பித்துக் கட்டப்பட்டது. பேருந்து நிலையத்தை 3 மாதத்திற்கு முன் முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

பேருந்து நிலையத்தில் 40-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான குத்தகை நடைபெறாததால், இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது.

எனவே, கடைகளை குத்தகைக்கு விட மாவட்ட நிா்வாகம், சாத்தான்குளம் பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.