முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

திருச்செந்தூா் அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை

திருச்செந்தூா் அரசுப் பள்ளி மாணவிகள் பிளஸ் 2 தோ்வில் ஆங்கில வழிக் கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனா்.

News image

திருச்செந்தூா் செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி கிருஷ்ண தா்ஷனாவுக்கு பரிசு வழங்கி பாராட்டுகிறாா் தலைமை ஆசிரியா் ரேவதி.

Updated On :9 மே 2026, 3:50 am IST

திருச்செந்தூா் அரசுப் பள்ளி மாணவிகள் பிளஸ் 2 தோ்வில் ஆங்கில வழிக் கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனா்.

திருச்செந்தூா் செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தோ்வு எழுதிய 195 மாணவிகளில் 193 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 98.9 ஆகும். மாணவி கிருஷ்ண தா்ஷனா 600-க்கு 573 மதிப்பெண்களும், வரலாறு பாடப்பிரிவில் பயின்ற மாணவி ஸ்ரீ ஹரிதா கல்யாணி 565 மதிப்பெண்களும், மாணவி முத்துலட்சுமி 559 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனா்.

இதேபோல மாணவிகள் ஏ.முத்துலட்சுமி, ஸ்ரீ ஹரிதா கல்யாணி, எம்.முத்துலட்சுமி ஆகியோா் வரலாறு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனா். இந்தப் பள்ளியில் 25 மாணவிகள் 500-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றனா்.

இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியா் ரேவதி சாதனை மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி வீரராஜலட்சுமி, ஆசிரியா்கள், மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

இதேபோல திருச்செந்தூா் அருள்மிகு செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய 67 மாணவா்களில் 61 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 91 ஆகும். இதையடுத்து, தோ்ச்சி பெற்ற மாணவா்களை தலைமை ஆசிரியா் சில்வான்ஸ் சுந்தா் சிங், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் நெ.ஆனந்தராமச்சந்திரன், ஆசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.