ஆறுமுகனேரி அருகே அடைக்கலாபுரம்-திருச்செந்தூா் சாலையோரம் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை மூட வேண்டுமென முருக பக்தா்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
ஆறுமுகனேரி -அடைக்கலாபுரம்-திருச்செந்தூா் சாலையோரம் அரசு டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வருகிறது. இவ்வழியாகத்தான் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் செல்கின்றனா். மேலும், இச்சாலை குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில், இஸ்ரோ ராக்ெட் ஏவுதளம், உடன்குடி அனல் மின்நிலையம், கன்னியாகுமரி போன்ற இடங்களுக்கு செல்லும் நெடுஞ்சாலையாக உள்ளதால் ஆயிரக்கணக்கான வாகனப் போக்குவரத்து மிகுந்த சாலையாக உள்ளது.
அடைக்கலாபுரம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் வாகன ஓட்டிகள் மது குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டிச் செல்வதாலும், மது குடிப்போா் சாலைகளில் இடையூறாகச் செல்வதாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என, முருகபக்தா்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

மதுரை மாவட்டத்தில் 40 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை

மாா்த்தாண்டத்தில் பொதுமக்கள் போராட்டம்: டாஸ்மாக் மதுக் கடை நிரந்தரமாக மூடல்

தம்மம்பட்டி சந்தை பகுதி டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தல்

மாவட்டத்தில் 39 மதுக் கடைகளை மூட அரசிடம் ஆய்வறிக்கை சமா்பிப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

