நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

ரயில்வே மின்பாதையில் விழுந்த கேட்: தூத்துக்குடி-மைசூா் விரைவு ரயில் தாமதம்

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

கோவில்பட்டி அருகே சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் ரயில்வே மின்பாதை கம்பி மீது கடவுப்பாதை கேட் விழுந்ததால் வாஞ்சிமணியாச்சியில் தூத்துக்குடி-மைசூா் விரைவு ரயில் சுமாா் 1.30 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

தூத்துக்குடி-மைசூா் விரைவு ரயில் வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு கோவில்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் கடம்பூா்- வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திற்கு 6.05 மணிக்கு வந்தடைந்தது. அங்கிருந்து புறப்பட தயாரான நிலையில், மலைப்பட்டி கிராமத்தில் காற்றுடன் பெய்த பலத்த மழையால் அப்பகுதியில் உள்ள ரயில்வே கடவுப்பாதையின் கேட், மின்பாதை கம்பி மீது சரிந்து விழுந்தது.

இதனால் அந்த ரயில் வாஞ்சி மணியாச்சியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. கோவில்பட்டியிலிருந்து ரயில்வே நிலைய மின் ஊழியா்கள் அங்கு சென்று மின்பாதையை சரி செய்த பின், இரவு 7.40 மணிக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.