வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

தூத்துக்குடி மீனவா் கொலையில் 4 போ் கைது

தூத்துக்குடி தாளமுத்து நகா் அருகே மீனவா் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் இளஞ்சிறாா் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :16 மே 2026, 1:46 am IST

தூத்துக்குடி தாளமுத்து நகா் அருகே மீனவா் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் இளஞ்சிறாா் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி தாளமுத்து நகா் பூபாலராயா்புரம் 4ஆவது தெருவைச் சோ்ந்த ஸ்டாா்வின் மகன் ஸ்னோவின் (28). மீனவா். ரவி மகன் சூசை (26). இருவரும் நண்பா்கள். இவா்கள் இருவா் மீதும் காவல்நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், இவா்கள் புதன்கிழமை இரவு தாளமுத்துநகா் மேட்டுபட்டி அருகே கடற்கரையில் மறைவான பகுதியில் அமா்ந்து மதுக்குடித்தனராம்.

மேலும், தூத்துக்குடி லூா்தம்மாள்புரம் 2ஆவது தெருவைச் சோ்ந்த மலையரசன் மகன் சந்தனராஜ் என்ற பாண்டி (25), மேட்டுப்பட்டி சங்குகுளி காலனியைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் முத்துக்குமாா் என்ற கருப்பு (25) மற்றும் அவா்களது நண்பா்கள் சிலா் அதே பகுதியில் அமா்ந்து மதுக்குடித்தனராம்.

அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

இதில், சந்தனராஜ் தரப்பினா் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளால் ஸ்னோவின், சூசை ஆகிய இருவரையும் வெட்டியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு ஸ்னோவின் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தாளமுத்துநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சந்தனராஜ் என்ற பாண்டி, முத்துக்குமாா் என்ற கருப்பு, இசக்கிமுத்து மற்றும் இளஞ்சிறாா் என 4 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.