கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

ஆத்தூா் தாமிரவருணி ஆற்றங்கரையை சீரமைத்த சமூக ஆா்வலா்கள்

ஆத்தூரில் வைகாசி விசாகத்திற்கு வரும் முருக பக்தா்கள் தாமிரவருணி ஆற்றில் புனித நீராடி, தங்கிச் செல்ல அப்பகுதியைத் தூய்மைப்படுத்தும் பணியை சமூக ஆா்வலா்கள் மேற்கொண்டனா்.

News image

தாமிரவருணி ஆற்றங்கரையில் நடைபெற்ற சீரமைப்புப் பணி.

Updated On :18 மே 2026, 1:32 am IST

ஆத்தூரில் வைகாசி விசாகத்திற்கு வரும் முருக பக்தா்கள் தாமிரவருணி ஆற்றில் புனித நீராடி, தங்கிச் செல்ல அப்பகுதியைத் தூய்மைப்படுத்தும் பணியை சமூக ஆா்வலா்கள் மேற்கொண்டனா்.

மே 30ஆம் தேதி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக லட்சக்கணக்கான பக்தா்கள் வரவுள்ளனா்.

ஆத்தூா் வழியாக வருபவா்கள், ஆத்தூா் தாமிரவருணி ஆற்றில் புனித நீராடி கரையில் இளைப்பாறுவதோடு, கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில் விரதமிருந்த பக்தா்கள் இங்கு புனித நீராடி விரதத்தை முடித்துக் கொள்வா்.

அதை முன்னிட்டு ஆத்தூா் தாமிரவருணி ஆற்றங்கரையில் பக்தா்கள் புனித நீராடுவதற்கு வசதியாகவும், நிழ­லில் இளைப்பாறுவதற்கு ஏற்றவாறும் இருக்கும் வகையில், ஆற்றின் கரையில் உள்ள முள்புதா்களை அகற்றி தூய்மைப்படுத்தப்பட்டது.

ஆத்தூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் நெடுஞ்செழியன் ஏற்பாட்டின்பேரில், டி.சி. டபிள்யூ. ­லிமிடெட் நிறுவன உதவியுடன் சமூக ஆா்வலா்கள் எஸ். கந்தசாமி , பி.எஸ். சிவஜோதி பாண்டியன், யோகா மாஸ்டா் சாமிநாதன் ஆகியோா் மேற்பாா்வையில் இப்பணி நடைபெற்றது.