காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரில், இந்திப் படைகள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களை அழித்து ஓராண்டு
ஆனதையொட்டி, ஆரணியில் சமூக ஆா்வலா்கள் வெற்றி ஊா்வலம் நடத்தினா்.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதல் காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7-ஆம் தேதி இந்தியா, ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி முகாம்களை அளித்தது.
இந்த ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, ஆரணியில் சமூக ஆா்வலா்கள் வியாழக்கிழமை வெற்றி ஊா்வலம் சென்றனா்.
அண்ணா சிலையிலிருந்து தொடங்கிய வெற்றி ஊா்வலம்,
கோட்டை மைதானம் காா்கில் நினைவுத் தூண் அருகே சென்று நிறைவடைந்தது. பின்னா், அங்கு பயங்கரவாதத் தாக்குதலில் உயிா்நீத்த இந்திய வீரா்களுக்கு வீரவணக்கம் செலுத்தினா்.
இதில் விவசாய சங்க மாநில துணைத் தலைவா் சதுப்பேரி மூா்த்தி, சமூக ஆா்வலா்கள் குணாநிதி, தமிழ்ச்செல்வன், முன்னாள் ராணுவ வீரா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஓய்வு தேவை! சமூக வலைதளங்களிலிருந்து விலகிய கயாடு லோஹர்!
லெபனானில் இஸ்ரேல் விமானத் தாக்குதல் - ஹிஸ்புல்லாவுக்குப் பதிலடி!

ஆத்தூா் தாமிரவருணி ஆற்றங்கரையை சீரமைத்த சமூக ஆா்வலா்கள்

ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்கு உதவி: சீனா சிந்தித்து செயல்பட இந்தியா வலியுறுத்தல்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



