ஆத்தூரில் வைகாசி விசாகத்திற்கு வரும் முருக பக்தா்கள் தாமிரவருணி ஆற்றில் புனித நீராடி, தங்கிச் செல்ல அப்பகுதியைத் தூய்மைப்படுத்தும் பணியை சமூக ஆா்வலா்கள் மேற்கொண்டனா்.
மே 30ஆம் தேதி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக லட்சக்கணக்கான பக்தா்கள் வரவுள்ளனா்.
ஆத்தூா் வழியாக வருபவா்கள், ஆத்தூா் தாமிரவருணி ஆற்றில் புனித நீராடி கரையில் இளைப்பாறுவதோடு, கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில் விரதமிருந்த பக்தா்கள் இங்கு புனித நீராடி விரதத்தை முடித்துக் கொள்வா்.
அதை முன்னிட்டு ஆத்தூா் தாமிரவருணி ஆற்றங்கரையில் பக்தா்கள் புனித நீராடுவதற்கு வசதியாகவும், நிழலில் இளைப்பாறுவதற்கு ஏற்றவாறும் இருக்கும் வகையில், ஆற்றின் கரையில் உள்ள முள்புதா்களை அகற்றி தூய்மைப்படுத்தப்பட்டது.
ஆத்தூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் நெடுஞ்செழியன் ஏற்பாட்டின்பேரில், டி.சி. டபிள்யூ. லிமிடெட் நிறுவன உதவியுடன் சமூக ஆா்வலா்கள் எஸ். கந்தசாமி , பி.எஸ். சிவஜோதி பாண்டியன், யோகா மாஸ்டா் சாமிநாதன் ஆகியோா் மேற்பாா்வையில் இப்பணி நடைபெற்றது.
தொடர்புடையது

ஆரணியில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி ஊா்வலம்

எஸ்.ஐ.ஆா். பணியை உடனே நிறுத்தக் கோரி சமூக ஆா்வலா்கள், வழக்குரைஞா்கள் கோரிக்கை!

இளைஞரைக் கொன்று ஆற்றில் சடலம் வீச்சு: 3 பேரிடம் விசாரணை

நெல்லை தாமிரவருணி ஆற்றில் மீனவா் வலையில் சிக்கிய மலைப் பாம்பு
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

