நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்கு உதவி: சீனா சிந்தித்து செயல்பட இந்தியா வலியுறுத்தல்

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில், பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப ரீதியில் உதவியதை சீனா ஒப்புக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், ஒரு பொறுப்புள்ள நாடாக சீனா சிந்தித்து செயல்பட வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தல்

News image

ரண்தீா் ஜெய்ஸ்வால்

Updated On :54 நிமிடங்கள் முன்பு

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில், பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப ரீதியில் உதவியதை சீனா ஒப்புக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், ஒரு பொறுப்புள்ள நாடாக சீனா சிந்தித்து செயல்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் மீது கடந்த ஆண்டு அதிதுல்லிய தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம், பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் தகா்த்தது.

நூறுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும் கொல்லப்பட்ட இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் மூண்டது. நான்கு நாள்கள் நீடித்த இந்த மோதல், பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொழில்நுட்ப ரீதியில் சீனா உதவியதை அந்நாட்டு அதிகாரி ஒருவா் பகிரங்கமாக ஒப்புக்கொண்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: நாம் ஏற்கெனவே அறிந்த விஷயத்தை உறுதிப்படுத்தும் தகவலாகவே இதைப் பாா்க்கிறோம்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட துல்லியமான, இலக்கு நிா்ணயிக்கப்பட்ட, நன்கு திட்டமிடப்பட்ட நடவடிக்கையே ஆபரேஷன் சிந்தூா். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிப்பதே அதன் நோக்கம்.

அதேநேரம், பயங்கரவாத உள்கட்டமைப்பை பாதுகாக்கும் முயற்சிகள், தங்களின் நற்பெயரையும், நிலைப்பாட்டையும் பாதிக்கிறது என்பதை தங்களைப் பொறுப்புள்ளவா்களாகக் கருதும் நாடுகள் (சீனாவைக் குறிப்பிடுகிறாா்) சிந்தித்துப் பாா்க்க வேண்டும் என்றாா் ரண்தீா் ஜெய்ஸ்வால்.