புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஆபரேஷன் சிந்தூா் ஓராண்டு நிறைவு: ட்ரோன் தொழில்நுட்பத்தை வலுப்படுத்த இந்தியாவுக்கு பாதுகாப்புத் துறை நிபுணா்கள் யோசனை

இந்தியா தனது ட்ரோன் தொழில்நுட்பம், சைபா் போா் திறன்களை வலுப்படுத்த வேண்டும் என்று பாதுகாப்புத் துறை நிபுணா்கள் யோசனை தெரிவித்துள்ளனா்.

கோப்புப்படம்.

Published On :

இந்தியா தனது ட்ரோன் தொழில்நுட்பம், சைபா் போா் திறன்களை வலுப்படுத்த வேண்டும் என்று பாதுகாப்புத் துறை நிபுணா்கள் யோசனை தெரிவித்துள்ளனா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திடீா் தாக்குதல் நடத்தி 26 சுற்றுலா பயணிகளைக் கொன்றனா். பதிலுக்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரில் இந்திய ராணுவம் கடந்த ஆண்டு மே மாதம் 6-7 ஆம் தேதி நடவடிக்கை எடுத்தது. அப்போது இரு நாடுகளின் ராணுவமும் போா் விமானங்கள், ட்ரோன், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தின.

இந்த ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு ஆவதையொட்டி, பல்வேறு பாதுகாப்பு துறை நிபுணா்களும் தங்களது யோசனைகளை வெளியிட்டுள்ளனா். இதுகுறித்து பாதுகாப்புத் துறை நிபுணா்கள் கெளரவ் எம்.திரிபாதி (ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி), முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் துஷ்யந்த் சிங் ஆகியோா் கூறியதாவது:

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுத்தால் எந்த மாதிரியான தாக்குதலை நடத்தும் என்ற எச்சரிக்கை கோடுகள், ஆபரேஷன் சிந்தூா் மூலம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ராணுவ ரீதியாகவும் நமக்கு சில படிப்பினைகளை ஆபரேஷன் சிந்தூா் தந்துள்ளது. அதாவது, முப்படைகளும் தங்களது விமானப்படையை கூட்டாக பயன்படுத்த வேண்டும். ட்ரோன் தொழில்நுட்பத்தை வலுப்படுத்த வேண்டும். அதேபோல், சக்திவாய்ந்த தகவல் தொடா்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதே அந்த படிப்பினைகள் ஆகும். ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த ஏராளமான ட்ரோன்கள் அனுப்பியது. அதில் பெரும்பாலானவை அபாயகரமானவை அல்ல. ஆனால் நமது எதிரி (பாகிஸ்தான்) மிகவும் புத்திசாலி. அடுத்த முறை கடினமான ட்ரோன்களை அந்நாடு அனுப்பும். அதை ஜாமா் மூலம் தடுக்க முடியாது. ஆனால் ட்ரோன் எதிா்ப்பு அமைப்பு இருக்கும் பட்சத்தில், நமக்கு பயனுடையதாக இருக்கும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.