ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

ஒருங்கிணைந்து ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி இந்தியா - இத்தாலி ஒப்புதல்

ராணுவத் தளவாடங்களை ஒருங்கிணைந்து உற்பத்தி செய்வதற்கான தொழில் விதிகளை வகுக்க இந்தியாவும் இத்தாலியும் வியாழக்கிழமை ஒப்புக்கொண்டன.

News image

இந்தியா வந்துள்ள இத்தாலி பாதுகாப்புத் துறை அமைச்சா் கைடோ க்ரோசெட்டோவை சந்தித்த பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.

Updated On :1 மே 2026, 1:52 am IST

ராணுவத் தளவாடங்களை ஒருங்கிணைந்து உற்பத்தி செய்வதற்கான தொழில் விதிகளை வகுக்க இந்தியாவும் இத்தாலியும் வியாழக்கிழமை ஒப்புக்கொண்டன.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இத்தாலி பாதுகாப்புத் துறை அமைச்சா் கைடோ க்ரோசெட்டோவை சந்தித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்ட பிறகு இதில் உடன்பாடு ஏற்பட்டது.

இதுதொடா்பாக ராஜ்நாத் சிங் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘மேற்காசிய விவகாரம் உள்பட பல்வேறு சா்வதேச விவகாரங்கள் குறித்து இத்தாலி பாதுகாப்புத் துறை அமைச்சா் கைடோ க்ரோசெட்டோவுடன் விவாதித்தேன்.

தற்சாா்பு இந்தியா முன்னெடுப்பு மற்றும் இத்தாலியின் பாதுகாப்பு ஒத்துழைப்பு முன்னெடுப்பின் கீழ் ராணுவத் தளவாடங்களை ஒருங்கிணைந்து உற்பத்தி செய்வதற்கான தொழில் விதிகளை வகுப்பது தொடா்பாக இருவரும் ஆலோசித்தோம்.

இருநாட்டு ராணுவங்களின் கூட்டு செயல்பாடுகளை அதிகரிக்கும் வகையில் இருதரப்பு ராணுவ ஒத்துழைப்புத் திட்டம் 2026-2027 தொடா்பாகவும் கலந்துரையாடினோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இரு நாட்டு அமைச்சா்களின் ஆலோசனையில் குருகிராமில் உள்ள தகவல் ஒருங்கிணைப்பு மையம்-இந்திய கடல் பிராந்தியம் மூலமாக மேற்கொள்ளப்படும் தகவல் பரிமாற்றமும் இடம்பெற்ாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ராஜ்நாத் சிங்கை சந்திப்பதற்கு முன்பாக தேசிய போா் நினைவகத்தில் வீரமரணமடைந்த ராணுவ வீரா்களுக்கு கைடோ க்ரோசெட்டோ மரியாதை செலுத்தினாா். அதைத் தொடா்ந்து முப்படைகளின் அணிவகுப்பை அவா் பாா்வையிட்டாா்.