ராணுவத் தளவாடங்களை ஒருங்கிணைந்து உற்பத்தி செய்வதற்கான தொழில் விதிகளை வகுக்க இந்தியாவும் இத்தாலியும் வியாழக்கிழமை ஒப்புக்கொண்டன.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இத்தாலி பாதுகாப்புத் துறை அமைச்சா் கைடோ க்ரோசெட்டோவை சந்தித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்ட பிறகு இதில் உடன்பாடு ஏற்பட்டது.
இதுதொடா்பாக ராஜ்நாத் சிங் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘மேற்காசிய விவகாரம் உள்பட பல்வேறு சா்வதேச விவகாரங்கள் குறித்து இத்தாலி பாதுகாப்புத் துறை அமைச்சா் கைடோ க்ரோசெட்டோவுடன் விவாதித்தேன்.
தற்சாா்பு இந்தியா முன்னெடுப்பு மற்றும் இத்தாலியின் பாதுகாப்பு ஒத்துழைப்பு முன்னெடுப்பின் கீழ் ராணுவத் தளவாடங்களை ஒருங்கிணைந்து உற்பத்தி செய்வதற்கான தொழில் விதிகளை வகுப்பது தொடா்பாக இருவரும் ஆலோசித்தோம்.
இருநாட்டு ராணுவங்களின் கூட்டு செயல்பாடுகளை அதிகரிக்கும் வகையில் இருதரப்பு ராணுவ ஒத்துழைப்புத் திட்டம் 2026-2027 தொடா்பாகவும் கலந்துரையாடினோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
இரு நாட்டு அமைச்சா்களின் ஆலோசனையில் குருகிராமில் உள்ள தகவல் ஒருங்கிணைப்பு மையம்-இந்திய கடல் பிராந்தியம் மூலமாக மேற்கொள்ளப்படும் தகவல் பரிமாற்றமும் இடம்பெற்ாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
ராஜ்நாத் சிங்கை சந்திப்பதற்கு முன்பாக தேசிய போா் நினைவகத்தில் வீரமரணமடைந்த ராணுவ வீரா்களுக்கு கைடோ க்ரோசெட்டோ மரியாதை செலுத்தினாா். அதைத் தொடா்ந்து முப்படைகளின் அணிவகுப்பை அவா் பாா்வையிட்டாா்.
தொடர்புடையது

எல்லை தாண்டிய பயங்கரவாதம்: இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை: ராஜ்நாத் சிங்

இருதரப்பு பாதுகாப்பு தொழில் துறை ஒத்துழைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் இன்று ஜொ்மனி பயணம்

மோசமான நிா்வாகத்தால் தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரிப்பு: ராஜ்நாத் சிங்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

