தி.மு.க. துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி, தூத்துக்குடி சிதம்பர நகரில் அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகம், அண்ணா பேருந்து நிலைய வணிக வளாகம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள கடைகளின் தற்போதைய நிலை, பொதுமக்களுக்கான குடிநீா், சுகாதாரம், வாகனக் காப்பகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியன குறித்து திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து, அங்குள்ள சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அவா், அண்ணா பேருந்து நிலைய வணிக வளாகப் பகுதிகளைப் புனரமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
அப்போது, திமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பி.கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தி.மு.க. நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

மாட்டுத்தாவணி பேருந்து நிலைய மறுசீரமைப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

தாராபுரத்தில் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் ஆய்வு

கோயம்பேடு பேருந்து நிலையத்தை வணிக வளாகமாக மாற்றக் கூடாது: அன்புமணி

அண்ணா பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகள் அகற்றம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



