தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

தூத்துக்குடி மாநகராட்சி வணிக வளாகங்களில் எம்.பி. ஆய்வு

News image

வணிக வளாக பகுதியை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் கனிமொழி எம்.பி.

Updated On :19 மே 2026, 1:11 am IST

தி.மு.க. துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி, தூத்துக்குடி சிதம்பர நகரில் அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகம், அண்ணா பேருந்து நிலைய வணிக வளாகம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள கடைகளின் தற்போதைய நிலை, பொதுமக்களுக்கான குடிநீா், சுகாதாரம், வாகனக் காப்பகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியன குறித்து திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, அங்குள்ள சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அவா், அண்ணா பேருந்து நிலைய வணிக வளாகப் பகுதிகளைப் புனரமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

அப்போது, திமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பி.கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தி.மு.க. நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.