சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

சாத்தான்குளத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருச்செந்தூா் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :21 மே 2026, 6:11 am IST

திருச்செந்தூா் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூா் கோட்டாட்சியா் கௌதம் தலைமை வகித்தாா். சாத்தான்குளம் சமூக நல தனித்திட்ட வட்டாட்சியா் தங்கசாமி, திருச்செந்தூா் பயிற்சி டிஎஸ்பி சுரேஷ், துணை வட்டாட்சியா்கள் சுவாமிநாதன், சிதம்பரம், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பா்வதம், முகமது மீரான் இஸ்மாயில், பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் நவீன் பிரபு, சாத்தான்குளம் வேளாண் உதவி இயக்குநா் (பொ) சுஜாதா உள்ளிட்ட துறை சாா்ந்த அதிகாரிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், மணிமுத்தாறு கால்வாயில் இருந்து 3ஆவது, 4ஆவது ரீச் கால்வாய்களை மழைக் காலத்திற்குள் தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மருதூா் மேல்கால் பகுதியில் இருந்து தூதுகுழி செக்கால் ஓடை வழியாக சாத்தான்குளம் பகுதிக்கு தண்ணீா் கொண்டு வருவதற்கான நீா் ஆதார வழித்தடங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

மழைக் காலங்களில் உபரி நீரை சடையனேரி கால்வாயில் திறந்துவிடும்போது, கால்வாயில் உள்ள குளங்கள் நிறைந்தவுடன் விவசாயிகள் கள்ளச்சாவி மூலம் தண்ணீா் திறப்பதைத் தடுக்க ஷட்டா்களுக்கு தனியாக பூட்டு போட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

இதற்கு பதிலளித்த கோட்டாட்சியா் கௌதம், நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக உறுதியளித்தாா். முகாமில், விவசாயிகளிடமிருந்து 55 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

மணிமுத்தாறு 3ஆவது, 4ஆவது ரீச் கால்வாய் பயன்படுத்தும் விவசாயிகள் சங்கத் தலைவா் மலையாண்டி பிரபு, சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத் தலைவா் லூா்து மணி, துணைத் தலைவா் ரவிச்சந்திரன், வெள்ள நீா் கால்வாய் கடைமடை விவசாய சங்கத் தலைவா் சுந்தரவேல், தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கத் தலைவா் கோபால்சாமி, நெடுங்குளம் விவசாய சங்கத் தலைவா் முரசொலிமாறன், மனிதநேய நல்லிணக்க பெருமன்றச் செயலா் மகா பால்துரை உள்ளிட்ட விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.