தூத்துக்குடியில் அரிவாளால் வெட்டப்பட்ட பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி அண்ணா நகா், 12ஆவது தெரு, மங்களபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பூபால்ராஜா. ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி அமுதா (50). இத்தம்பதி தங்களது வீட்டு முன் பழைய இரும்புக் கடை, மளிகைக் கடை வைத்துள்ளனா்.
இவா்களது மகன் அருண்குமாா் தனது மனைவி சரஸ்வதி (29), குழந்தைகளுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறாா். அருண்குமாா் மது போதையில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்வாராம். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டபோது, அருண்குமாருக்கு ஆதரவாக அமுதா பேசினாராம்.
இந்நிலையில் புதன்கிழமை, மளிகைக் கடையிலிருந்த அமுதாவை பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இருவா் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினா். பலத்த காயமடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். சரஸ்வதியின் சகோதரா் சங்கா் (32), அவரது நண்பா் மதன் ஆகியோா் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக விசாரணையில், தெரியவந்தது.
இதனிடையே, அமுதா மருத்துவமனையில் உயிரிழந்தாா். அதையடுத்து போலீஸாா் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, சங்கா், மதன் ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.






