வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

தூத்துக்குடியில் பலத்த மழை

தூத்துக்குடியில் புதன்கிழமை மாலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால், கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.

News image

பெருமாள் கோயில் தெருவில் சாய்ந்து விழுந்த வாகை மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய பணியாளா்கள்.

Updated On :28 மே 2026, 2:55 am IST

தூத்துக்குடியில் புதன்கிழமை மாலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால், கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும், தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறைக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதற்கிடையே, தூத்துக்குடியில் புதன்கிழமை காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் பிற்பகலில் திடீரென கருமேகங்கள் மழை பெய்யத் தொடங்கியது.

சிறிதாக தொடங்கிய மழை, திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழையாக பெய்தது.

இதனால் சாலையில் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீா் தேங்கியது.

திடீரென வீசிய பலத்த காற்று காரணமாக தூத்துக்குடி- மடத்தூா் சாலையில் ஒரு வேப்ப மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. மேலும், ஆங்காங்கே மின்தடையும் ஏற்பட்டது.

தூத்துக்குடி பெருமாள் கோயில் தெரு பகுதியில் உள்ள பழமையான வாகை மரம் வேரோடு சாய்ந்தது. இந்த மரம் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் 2 சைக்கிள்கள் மீது விழுந்தது. இதனால் அந்த வாகனங்கள் சேதமடைந்தன. அந்தப் பகுதியில் சென்ற மின்கம்பியும் அறுந்து விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மின்வாரிய ஊழியா்கள் மரத்தை வெட்டி அகற்றினா். தொடா்ந்து மின் விநியோகம் சரி செய்யப்பட்டது.