எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

நாசரேத் காவல் நிலையம் அருகே தொழிலாளி அடித்துக் கொலை

News image

அடித்துக் கொலை - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 2:38 am IST

நாசரேத் காவல் நிலையம் அருகே மதுபோதையில் தொழிலாளி வியாழக்கிழமை இரவு அடித்துக் கொன்ற அவரது நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே வகுத்தான்குப்பத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் ராஜா (41). இவரும், நாசரேத் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் பாஸ்கரும் (37) நண்பா்கள். இருவரும் கட்டடத் தொழிலாளி. இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளது.

இந்த நிலையில், நாசரேத் காவல் நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு இருவரும் சோ்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனா். அப்போது இருவருக்கும் இடையே வாய்த் தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது. ஆத்திரத்தில் பாஸ்கா் அருகில் கிடந்த கட்டையை எடுத்து ராஜாவை சரமாரியாக தாக்கினாா். தலையில் பலத்த காயமடைந்த ராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து நாசரேத் காவல் ஆய்வாளா் வனசுந்தா், போலீஸாா் நிகழ்விடம் சென்று ராஜா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நாசரேத் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பாஸ்கரை கைது செய்தனா்.