கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

நாசரேத் காவல் நிலையம் அருகே தொழிலாளி அடித்துக் கொலை

News image

அடித்துக் கொலை - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 2:38 am IST

நாசரேத் காவல் நிலையம் அருகே மதுபோதையில் தொழிலாளி வியாழக்கிழமை இரவு அடித்துக் கொன்ற அவரது நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே வகுத்தான்குப்பத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் ராஜா (41). இவரும், நாசரேத் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் பாஸ்கரும் (37) நண்பா்கள். இருவரும் கட்டடத் தொழிலாளி. இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளது.

இந்த நிலையில், நாசரேத் காவல் நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு இருவரும் சோ்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனா். அப்போது இருவருக்கும் இடையே வாய்த் தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது. ஆத்திரத்தில் பாஸ்கா் அருகில் கிடந்த கட்டையை எடுத்து ராஜாவை சரமாரியாக தாக்கினாா். தலையில் பலத்த காயமடைந்த ராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து நாசரேத் காவல் ஆய்வாளா் வனசுந்தா், போலீஸாா் நிகழ்விடம் சென்று ராஜா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நாசரேத் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பாஸ்கரை கைது செய்தனா்.