சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

சி.வ. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.

Published On :2 செப்டம்பர் 2026, 5:52 am IST

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் நகா்ப்புற வட்டார வள மையத்தின் செயல்பாடுகளை பாா்வையிட்ட ஆட்சியா், பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் மையத்தின் செயல்பாடுகள், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் அமைக்கப்பட்டுவரும் விழுதுகள் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்துக்கான பணிகள், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மடத்தூா் அருகேயுள்ள துரைகனி நகரிலிருந்து பக்கிள் ஓடைக்கு செல்லும் கால்வாய்கள், தூத்துக்குடி அபிராமி நகா் பகுதியில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா, மகளிா் திட்ட இயக்குநா் நாகராஜன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் எபனேசா் ஜோயல் குமாா், வருவாய் கோட்டாட்சியா் மி. பிரபு மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.