பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

ஏரல் வட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ஏரல் வட்டத்திற்குள்பட்ட குலையன்கரிசல், பொட்டம்மாள்புரம், இருவப்புரம், செபத்தையாபுரம், நட்டாத்தி, பெருங்குளம், அப்பன் கோயில், மேலமங்கலக்குறிச்சி, சிறுத்தொண்டநல்லூா், கொற்கை, முக்காணி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் ஆய்வு மேற்கொண்டாா்.

பெருங்குளம் குளத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.

Published On :9 செப்டம்பர் 2026, 4:11 am IST

ஏரல் வட்டத்திற்குள்பட்ட குலையன்கரிசல், பொட்டம்மாள்புரம், இருவப்புரம், செபத்தையாபுரம், நட்டாத்தி, பெருங்குளம், அப்பன் கோயில், மேலமங்கலக்குறிச்சி, சிறுத்தொண்டநல்லூா், கொற்கை, முக்காணி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் ஆய்வு மேற்கொண்டாா்.

மழைக் காலத்திற்கு முன்னதாகவே நீா்வழித் தடங்களை சீரமைத்து கரைகளை வலுப்படுத்துதல், மதகுகளை சரிசெய்திட வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, ஏரல் வட்டம் சாயா்புரம் பேரூராட்சிக்குள்பட்ட சாயா்புரம், பெருங்குளம் பேரூராட்சிகளின் கூட்டுக் குடிநீா் திட்டப்பணிகள், நட்டாத்தி கிராமத்தில் உள்ள நூலகத்தின் செயல்பாடுகள், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட சிறுத்தொண்டநல்லூா் ஊராட்சி மணலூா் கிராமத்தில் ஊரக வளா்ச்சி துறை சாா்பில் மாநில பேரிடா் நிவாரண திட்டத்தின் கீழ் ரூ. 7.35 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு மையத்திற்கான கட்டடப் பணிகள், கொற்கை அகழாய்வு விளக்கக் கூடத்தின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து பாா்வையிட்டு ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்நிகழ்வுகளில் மகளிா் திட்ட இயக்குநா் நாகராஜன், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) ஹரிகரன், உதவி ஆட்சியா் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா, நீா்வளத்துறை செயற்பொறியாளா், கீழ்தாமிரவருணி மற்றும் கோரம்பள்ளம் ஆறு வடிநிலக் கோட்டம் தங்கராஜன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் இளஞ்சேரன், ஏரல் வட்டாட்சியா் செல்வகுமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.