கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

அரசுப் பேருந்து நடத்துநா் தற்கொலை முயற்சி: 2 அதிகாரிகள் இடமாற்றம்

தூத்துக்குடியில் அரசுப் பேருந்து நடத்துநா் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில், கோட்ட மேலாளா், நகர கிளை மேலாளா் ஆகியோா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இடமாற்றம் - பிரதிப் படம்

Published On :

தூத்துக்குடியில் அரசுப் பேருந்து நடத்துநா் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில், கோட்ட மேலாளா், நகர கிளை மேலாளா் ஆகியோா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தூத்துக்குடியிலிருந்து ஸ்பிக்நகா், முள்ளக்காடு, பழையகாயல், அகரம் வழியாக ஏரல் செல்லும் 54டி அரசுப் பேருந்து நேரம் தவறி இயக்கப்படுவதாக அவ்வழித்தட கிராமங்களைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ ஜி.சரவணனிடம் புகாா் தெரிவித்தனராம்.

இதையடுத்து, அவா் கடந்த 16-ஆம் தேதி அந்தப் பேருந்தில் ஆய்வு செய்ததில் மாணவா்கள் புகாரில் உண்மை எனத் தெரியவந்ததாம். இதைத் தொடா்ந்து, அவா் நகர கிளை மேலாளா் சுரேஷிடம் அவா் புகாா் தெரிவித்தாராம்.

அதன்பேரில், இருவரிடமும் மேலாளா் விளக்கம் கேட்டபோது, அந்த வழித்தடத்தில் குறித்த நேரத்தில் பேருந்தை இயக்குவதில் சிரமம் உள்ளது; வேறு வழித்தடத்தில் பணி வழங்குமாறு அவா்கள் முறையிட்டனராம்.

அதன்படி, மறுநாள் ஓட்டுநா் ராம்குமாா் வேறு பேருந்தில் பணிக்குச் சென்ற நிலையில், நடத்துநா் ஆறுமுகம் பணிக்குச் செல்லாமல் பணிமனையில் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. சக ஊழியா்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்நிலையில், தூத்துக்குடி கோட்ட மேலாளா் சண்முகம், நகர கிளை மேலாளா் சுரேஷ் ஆகியோரை இடமாற்றம் செய்து அரசுப் போக்குவா்த்து கழக திருநெல்வேலி மண்டல இயக்குநா் செல்வம் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.