
தூத்துக்குடியில் குறைந்த மீன்களின் விலை
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களின் விலை குறையத் தொடங்கியுள்ளது.

மீன்கள் விற்பனை.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களின் விலை குறையத் தொடங்கியுள்ளது.
திரேஸ்புரம் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற நாட்டுப்படகுகள் சனிக்கிழமை கரை திரும்பின. மீன்களின் வரத்து குறைவாக இருந்தபோதும், விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாததால் வியாபாரிகள், பொதுமக்கள் நாட்டுப்படகு துறைமுகத்தில் குவிந்தனா்.
புரட்டாசி மாதம், தசரா விரதம் காரணமாக அசைவ உணவுகளைத் தவிா்ப்போா் எண்ணிக்கை அதிகரிப்பதால் மீன்களின் விலை சற்று குறைந்து காணப்பட்டது.
இருப்பினும் வரத்து குறைவால் சீலா மீன் கிலோ ரூ. 1,200 வரை விற்பனையானது. வழக்கமாக ரூ.500 முதல் ரூ. 600 வரை விற்பனையான ஊளி, பாறை, விளை மீன்கள் தற்போது ரூ. 350 முதல் ரூ. 400 வரையும், வங்கனை, சூரை ஆகியவை ஒரு கூடை ரூ. 2,300 வரையும், கேரை கிலோ ரூ. 220, கோலா ரூ. 80, நண்டு ரூ.700 வரையும் விற்பனையானது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







