திருச்சி
வெள்ள நிவாரணம் கோரி சாலை மறியல்
நாகப்பட்டினம், ஜன. 8: நாகையை அடுத்த பாப்பாக்கோவில் அருகே வெள்ள நிவாரணம் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். மழை நீரால் சூழப்பட்ட வீடுகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி இந்தச் சாலை
நாகப்பட்டினம், ஜன. 8: நாகையை அடுத்த பாப்பாக்கோவில் அருகே வெள்ள நிவாரணம் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மழை நீரால் சூழப்பட்ட வீடுகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி இந்தச் சாலை மறியல் போராட்டம், பாப்பாக்கோவில் ஏறும் சாலையில் நடைபெற்றது.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இப்போராட்டம் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாகை வட்டாட்சியர் இரா. தினகரன், போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
