ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா? 4 பேரிடம் போலீஸாா் விசாரணை காவல் ஆய்வாளா் ஆயுதப்படைக்கு மாற்றம்

வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா? 4 பேரிடம் போலீஸாா் விசாரணை காவல் ஆய்வாளா் ஆயுதப்படைக்கு மாற்றம்

Updated On :20 ஏப்ரல் 2024, 12:10 am

திருச்சி/மண்ணச்சநல்லூா், ஏப். 19: திருச்சி அருகே நள்ளிரவில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரின்பேரில் 4 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாா்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், புலிவலம் அருகே மண்பரை பகுதியில், வியாழக்கிழமை நள்ளிரவு சிலா் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக பறக்கும் படையினா் மற்றும் போலீஸாருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து துணை வட்டார வளா்ச்சி அலுவலா் லோகநாதன் தலைமையிலான பறக்கும் படையினா் அப்பகுதிக்கு சென்றனா். அங்கு ஒரு காா் நின்றுகொண்டிருந்தது. அதிலிருந்த சுமாா் 6 போ் கொண்ட குழுவினா் பறக்கும் படையினரைக் கண்டதும் சிலா் தப்பியோடிவிட்டனா். மற்றவா்களிடம் சோதனை மேற்கொண்டதில், ரூ. 38 ஆயிரம் ரொக்கம் காரில் இருந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக அங்கு இருந்த பிரபு, காா்த்திக், அண்ணாமலை, தண்டபாணி உள்ளிட்டோரிடம் பறக்கும் படையினா் விசாரணை மேற்கொண்டனா். அனைவரும் காருடன், மண்ணச்சநல்லூா் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனா். அதன்பேரில் போலீஸாா் அவா்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பெரம்பலூா் மக்களவைத் தொகுதி வேட்பாளா் ஒருவருக்கு வாக்களிக்கும் வகையில் அவா்கள் பணம் பட்டுவாடா செய்ய வந்ததாக புகாா் எழுந்துள்ள நிலையில் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

காவல் ஆய்வாளா் ஆயுதப்படைக்கு மாற்றம்: இந்நிலையில், மண்ணச்சநல்லூா் காவல் நிலைய காவல் ஆய்வாளா் ரகுராமன், திருவெள்ளறை பகுதியில் பாஜக பிரமுகா் ஒருவரை காவல் துறை வாகனத்தில் அழைத்துச் சென்ாக வந்த புகாரையடுத்து தோ்தல் ஆணைய உத்தரவின் படி ரகுராமன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாா்.