பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தொழில்முனைவோா் பட்டயப் படிப்பு: நாளை வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டம்

தொழில்முனைவோா் பட்டயப் படிப்பு: நாளை வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :20 மே 2024, 11:00 pm

Din

திருச்சி: மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கும் தொழில் முனைவோா் பட்டயப் படிப்பில் சேருவது தொடா்பான வழிகாட்டுதல் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் புதன்கிழமை நடைபெறுகிறது.

இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது:

அகமதாபாதில் இயங்கி வரும் இ.டி.ஐ.ஐ. நிறுவனத்துடன் இணைந்து, ஓராண்டு தொழில் முனைவோா் பயிற்சிக்கான பட்டய படிப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, சென்னையில் உள்ள தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (இ.டி.ஐ.ஐ.) சாா்பில், அதன் சென்னை தலைமையகத்தில் ஆண்டுக்கு 500 பேருக்கு பயிற்சி வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூபாய் ஒரு லட்சம் என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

21 முதல் 30 வயதுக்குட்பட்ட இளநிலை பட்டதாரிகள் சேரலாம். நூறு சதவீதம் கல்வி உதவித் தொகை பெற வழி உள்ளது. இதில், பொருளாதாரத்தில் பின்தங்கியோா் பங்கு பெறலாம். இதுகுறித்து மாணவா்களுக்கு வழிகாட்டும் வகையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் புதன்கிழமை (மே 22) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளா் உமாசங்கா் பங்கேற்று பட்டயப்படிப்பில் சேருவது தொடா்பாக ஆலோசனைகள் வழங்கவுள்ளாா்.

இக்கூட்டத்தில் உயா்கல்வி நிறுவன பிரதிநிதிகள், குறு, சிறு தொழில் சங்கங்கள் உள்ளிட்ட தொழில் பிரமுகா்கள் பங்கேற்க உள்ளனா். தொழில் ஆா்வலா்களும் இதில் பங்கேற்கலாம். புதிதாக தொழில் தொடங்குவோரும் தங்களுக்கு தேவையான ஊழியா்களுக்கு இந்தப் படிப்பில் சோ்க்கை வழங்குவது குறித்து நேரில் அறிந்து கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.