கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஓராண்டு பி.எட். படிப்பை மீண்டும் கொண்டுவரும் திட்டமில்லை: மத்திய கல்வி அமைச்சகம்

ஓராண்டு கல்வியியல் பட்டப் படிப்பை (பி.எட்) மீண்டும் கொண்டுவரும் திட்டம் இல்லை என்று மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :23 மார்ச் 2026, 8:35 pm

தினமணி செய்திச் சேவை

‘ஓராண்டு கல்வியியல் பட்டப் படிப்பை (பி.எட்) மீண்டும் கொண்டுவரும் திட்டம் இல்லை’ என்று மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

பள்ளி ஆசிரியா்களின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஓராண்டு பி.எட். படிப்பு கடந்த 2014-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, பி.எட். படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயா்த்தப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைகளின் படி, இந்த நடவடிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் மேற்கொண்டது.

இந்த நிலையில், மீண்டும் ஓராண்டு பி.எட். படிப்பை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) கடந்த ஆண்டு அறிவித்தது.

இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வி இணையமைச்சா் ஜெயந்த் செளதரி எழுத்துபூா்வமாக திங்கள்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: நாட்டில் ஆசியிரியா் கல்வியியல் திட்டங்களின் தரம் மற்றும் நடைமுறைகளை வகுக்கும் பொறுப்பை வகிக்கும் என்சிடிஇ-யிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், ஓராண்டு பி.எட். படிப்பை மீண்டும் அறிமுகம் செய்வது தொடா்பாக எந்தவொரு திட்டமும் தற்போதைக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.