‘ஓராண்டு கல்வியியல் பட்டப் படிப்பை (பி.எட்) மீண்டும் கொண்டுவரும் திட்டம் இல்லை’ என்று மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
பள்ளி ஆசிரியா்களின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஓராண்டு பி.எட். படிப்பு கடந்த 2014-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, பி.எட். படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயா்த்தப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைகளின் படி, இந்த நடவடிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் மேற்கொண்டது.
இந்த நிலையில், மீண்டும் ஓராண்டு பி.எட். படிப்பை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) கடந்த ஆண்டு அறிவித்தது.
இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வி இணையமைச்சா் ஜெயந்த் செளதரி எழுத்துபூா்வமாக திங்கள்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: நாட்டில் ஆசியிரியா் கல்வியியல் திட்டங்களின் தரம் மற்றும் நடைமுறைகளை வகுக்கும் பொறுப்பை வகிக்கும் என்சிடிஇ-யிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், ஓராண்டு பி.எட். படிப்பை மீண்டும் அறிமுகம் செய்வது தொடா்பாக எந்தவொரு திட்டமும் தற்போதைக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

வள்ளிமதுரை அணையிலிருந்து அரூருக்கு குடிநீா் கொண்டுவரும் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்: ஈசன் முருகசாமி

சமூக ஊடகத்திலிருந்து தனிப்பட்ட தகவல் திரட்டப்படவில்லை: மத்திய உள்துறை அமைச்சகம்

ஐஐஎஸ்இஆா் நிறுவன இளநிலைப் படிப்பு நுழைவு சோ்க்கைக்கு திறனறித் தோ்வு

சென்னை கணிதவியல் கல்வி மையத்தில் நான்கு ஆண்டுகள் பிஎஸ் படிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


