அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மேற்கு வங்கத்தில் சிஏஏ குடியுரிமை விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்க மேலும் 2 குழுக்கள்: மத்திய உள்துறை அமைச்சகம் அமைப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) கீழ், இந்திய குடியுரிமை கோரி சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து முடிவெடுக்க மேலும் 2 அதிகாரமளிக்கப்பட்ட குழுக்களை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2026, 8:27 pm

தினமணி செய்திச் சேவை

மேற்கு வங்க மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) கீழ், இந்திய குடியுரிமை கோரி சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து முடிவெடுக்க மேலும் 2 அதிகாரமளிக்கப்பட்ட குழுக்களை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

இதுகுறித்த அறிவிக்கை அரசிதழில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. மாநிலத்தில் ஏற்கெனவே 2 அதிகாரமளிக்கப்பட்ட குழுக்கள் பணியமா்த்தப்பட்டுள்ள நிலையில், அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்படுவதைக் கருத்தில்கொண்டு மேலும் 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குழுவுக்கும் இந்திய பதிவாளா் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையரால் பரிந்துரைக்கப்படும் மத்திய அரசுத் துறையில் துணைச் செயலா் அந்தஸ்துக்கு குறையாத பதவி வகிக்கும் அலுவலா் தலைமை வகிப்பாா்.

மேலும், மத்திய அரசின் துணைச் செயலா் அந்தஸ்துக்கு குறையாத துணை புலனாய்வுப் பணியகத்தின் அலுவலா், வெளிநாட்டினா் மண்டல பதிவு அலுவலரால் பரிந்துரைக்கப்படும் மத்திய அரசின் துணைச் செயலா் அந்தஸ்துக்கு குறையாத பதவி வகிக்கும் அலுவலா், மேற்கு வங்கத்தில் உள்ள மத்திய தகவல் மையத்தின் மாநில தகவல் அதிகாரியால் பரிந்துரைக்கப்படும் மத்திய அரசின் துணைச் செயலா் அந்தஸ்துக்கு குறையாத பதவி வகிக்கும் அலுவலா் மற்றும் மாநில தபால் துறை தலைவரால் பரிந்துரைக்கப்படும் தபால் துறை அலுவலா் ஆகியோரும் இக் குழுவில் இடம்பெறுவா்.

இவா்களைத் தவிர, மாநில முதன்மைச் செயலா் (உள்துறை) அல்லது கூடுதல் தலைமைச் செயலா் (உள்துறை) அலுவலகத்திலிருந்து ஒரு பிரதிநிதியும், ரயில்வேயின் மண்டல ரயில்வே மேலாலா் அலுவலகப் பிரதிநிதியும் இக் குழுவில் அழைப்பாளா்களாக இடம்பெறுவா்.

கடந்த 2024-ஆம் ஆண்டு மாா்ச் 11-ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையின்படி, மக்கள்தொகை செயல்பாடுகள் இயக்குநா் தலைமையில் அமைக்கப்படும் இந்த அதிகாரமளிக்கப்பட்ட குழுவில் 7 உறுப்பினா்கள் இடம்பெறுவா் எனத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் உரிய ஆவணங்களின்றி புலம்பெயா்ந்த முஸ்லிம்கள் அல்லாத குடியேறிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்காக ‘குடியுரிமை திருத்தச் சட்டம் 2019’-ஐ மத்திய அரசு கொண்டுவந்து, கடந்த 2024-ஆம் ஆண்டு மாா்ச் 11-ஆம் தேதி அமல்படுத்தியது. இதன் கீழ், விண்ணப்பங்கள் பெறப்பட்டு, குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது.