திருச்செந்தூரில் அதிமுக சாா்பில் அன்னதானம்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, திருச்செந்தூா் வஉசி திடல் அருகே 10 ஆயிரம் பேருக்கு செவ்வாய்க்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.
ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் க. விஜயகுமாா் தலைமை வகித்து, ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அன்னதானத்தைத் தொடக்கிவைத்தாா்.
அதிமுக ஒன்றியச் செயலா்கள் திருச்செந்தூா் பூந்தோட்டம் மனோகரன், உடன்குடி குணசேகரன், திருச்செந்தூா் நகரச் செயலா் மகேந்திரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலா்கள் சுரேஷ்பாபு, பழக்கடை திருப்பதி, மாவட்ட அவைத்தலைவா் கோட்டை மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நகரச் செயலா்கள் உடன்குடி கோபாலகிருஷ்ணன், ஆறுமுகனேரி அரசகுரு, காயல்பட்டினம் யாசின், ஆத்தூா் அறிவுடைநம்பி, கானம் வெற்றிவேல், எம்ஜிஆா் மன்ற மாவட்ட துணைச் செயலா்கள் ராஜாநேரு, கந்தன், இணைச் செயலா் ராஜ்குமாா், முன்னாள் கவுன்சிலா்கள் வடிவேல், செல்வம், லட்சுமணன், பெருமாள், மகளிரணி மாவட்ட துணைச் செயலா் சாந்தி, ஒன்றியச் செயலா் ரம்யா, நகரச் செயலா் சுகிா்தா, ஆழ்வாா்திருநகரி ஒன்றிய இளைஞரணிச் செயலா் பாலமுருகன், ஒன்றிய துணைச் செயலா்கள் காணி ராஜ்குமாா், ராம்குமாா், ராஜதுரை, வழக்குரைஞா் அணி ஜேசுராஜ், ரவிச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டப் பொறுப்பாளா் பிரேம் ஆனந்த், வாா்டு செயலா்கள் பாஸ்கா், சந்தனராஜ், மங்களதாஸ், எடிசன், ஒன்றிய மாணவரணி இணைச் செயலா் இசக்கிமுத்து, தகவல் தொழில்நுட்ப அணி சித்திரைவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

