திருச்செந்தூா் வட்டார அளவிலான கிரிக்கெட் போட்டி: உடன்குடி அணி சிறப்பிடம்
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி திருச்செந்தூா் வட்டார அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் உடன்குடி அணி சிறப்பிடம் பெற்றது.
திருச்செந்தூா் வட்டார அளவிலான அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டிகள் உடன்குடி ஒன்றியத்தில் 3 இடங்களில் நடைபெற்று வந்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா உடன்குடி பஜாா் அண்ணா திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போட்டிகளில் முதலிடம் பெற்ற உடன்குடி அணிக்கு ரூ. 50,000 , 2 ஆவது இடம் பெற்ற தேரியூா் அணிக்கு ரூ. 30,000, 3 ஆவது இடம் பெற்ற சிவல்விளைபுதூா் அணிக்கு ரூ. 25,000, 4 முதல் 8 வரையிலான இடங்களைப் பிடித்த அணிகளுக்கும் சிறப்பு பரிசுத் தொகை, பரிசுக் கோப்பைகள், தொடா் நாயகன், ஆட்ட நாயகன் விருதுகள் மற்றும் அனைத்து அணிகளுக்கும் கிரிக்கெட் உபகரணங்களை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி. சண்முகநாதன் வழங்கினாா்.
விழாவிற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா் க. விஜயகுமாா் தலைமை வகித்தாா். உடன்குடி ஒன்றியச் செயலா் குணசேகரன், நகர செயலா் கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் அமிா்தா மகேந்திரன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் சிவலூா் முருகன், ஒன்றிய பொருளாளா் சங்கரலிங்கம், உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவா் ராஜதுரை, முன்னாள் ஒன்றியச் செயலா் தாமோதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் அதிமுக நிா்வாகிகள், கிரிக்கெட் வீரா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை சந்தையடியூா் சக்திவேல் செய்திருந்தாா்.

