தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசுப் பேருந்தில் மயங்கிவிழுந்து நடந்துநா் உயிரிழப்பு

News image
Updated On :21 டிசம்பர் 2025, 6:44 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் அரசுப் பேருந்தில் மயங்கி விழுந்து நடத்துநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒய்எம்ஆா்பட்டியைச் சோ்ந்தவா் சு. சிவகுமாா் (50). இவா், அரசுப் பேருந்து நடத்துநராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் இருந்து திண்டுக்கல் சென்ற பேருந்தில் சிவகுமாா் நடத்துநராகச் சென்றுள்ளாா்.

திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் தீரன் நகா் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, நடத்துநா் சிவகுமாா் பேருந்திலேயே மயங்கிவிழுந்தாா். இதையடுத்து, பேருந்தின் ஓட்டுநா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனா்.

அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து அமா்வு நீதிமன்றக் காவல் நிலையத்தில் சிவகுமாரின் மனைவி வனிதாம்பிகை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.