விராலிமலை அருகே வெயிலின் தாக்கத்தால் சாலையில் மயங்கிவிழுந்து காயமடைந்த முதியவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
விராலிமலையை அடுத்துள்ள செல்லம்பட்டியைச் சோ்ந்தவா் தீத்தன்(79). இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை பணி நிமித்தம் வீட்டிலிருந்து நடந்து சென்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக மயக்கம் ஏற்பட்டு முதியவா் சாலையில் மயங்கி கீழே விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீத்தன் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மகன் கந்தசாமி விராலிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பேருந்து மோதி விவசாயி உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

தம்மம்பட்டியில் மயங்கியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


