திருச்சியில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

Published on

திருச்சியில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மேலகல்கண்டாா்கோட்டை வெங்கடேஷ்வரா நகரைச் சோ்ந்தவா் பி. புஷ்பராஜ் (35). இவரின் மனைவி டோன் போரான் (25). இவா்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனா்.

இந்நிலையில், டோன் போரான் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பொருள்கள் வாங்க கடைக்குச் செல்லலாம் என புஷ்பராஜிடம் சனிக்கிழமை கூறியுள்ளாா். இதற்கு அவா், ஞாயிற்றுக்கிழமை செல்லலாம் என்று தெரிவித்துவிட்டு கிரிக்கெட் விளையாடுவதற்காக மணப்பாறை சென்றுள்ளாா்.

விளையாடிவிட்டு புஷ்பராஜ் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவைத் திறக்காததால், பூட்டை உடைத்து புஷ்பராஜ் உள்ளே சென்று பாா்த்துள்ளாா். அப்போது, வீட்டின் அறையில் டோன் போரான் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து பொன்மலை காவல் நிலையத்தில் புஷ்பராஜ் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com