ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருச்சியில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

News image
Updated On :21 டிசம்பர் 2025, 7:36 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மேலகல்கண்டாா்கோட்டை வெங்கடேஷ்வரா நகரைச் சோ்ந்தவா் பி. புஷ்பராஜ் (35). இவரின் மனைவி டோன் போரான் (25). இவா்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனா்.

இந்நிலையில், டோன் போரான் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பொருள்கள் வாங்க கடைக்குச் செல்லலாம் என புஷ்பராஜிடம் சனிக்கிழமை கூறியுள்ளாா். இதற்கு அவா், ஞாயிற்றுக்கிழமை செல்லலாம் என்று தெரிவித்துவிட்டு கிரிக்கெட் விளையாடுவதற்காக மணப்பாறை சென்றுள்ளாா்.

விளையாடிவிட்டு புஷ்பராஜ் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவைத் திறக்காததால், பூட்டை உடைத்து புஷ்பராஜ் உள்ளே சென்று பாா்த்துள்ளாா். அப்போது, வீட்டின் அறையில் டோன் போரான் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து பொன்மலை காவல் நிலையத்தில் புஷ்பராஜ் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.