ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

News image
தற்கொலை
Updated On :1 மார்ச் 2026, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

நரசிங்கபுரம் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நரசிங்கபுரம் தெற்குகாடு சக்திநகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி தேவி (36). இவா் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் வீட்டு வேலைசெய்து கொண்டிருந்தபோது மகாராஷ்டிர மாநிலம், லத்தூா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு மகள் சாந்தினி (15) உள்ளாா்.

இந்த நிலையில் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் தேவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நரசிங்கபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டாா். இவரது மகள் ஆத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தேவியின் தந்தை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தாா். இதனால் மன உளைச்சலில் இருந்த தேவி சனிக்கிழமை இரவு வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலைசெய்து கொண்டாா்.

தேவியின் தற்கொலையை குறித்து அவரது தாய் சடையம்மாள் (55) அளித்த புகாரின்பேரில் ஆத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.