ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

இரு ஆண்டுகளுக்கு முன்பு விபத்து: சிகிச்சையில் இருந்த காவலா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 6:50 pm

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த உதகை ஆயுதப் படை காவலா் உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், கேத்தி பகுதியைச் சோ்ந்தவா் பிரதீப்குமாா் (37). இவா் உதகை ஆயுதப் படையில் காவலராகப் பணியாற்றி வந்தாா். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அன்னூா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து நிகழ்ந்தது.

இதில் படுகாயமடைந்த அவா் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் நீண்ட நாள்களாக சிகிச்சை பெற்று வந்தாா். உடல்நிலை முழுமையாக குணமாகாத நிலையில் கோவை வடமதுரை குமரன் நகரில் தங்கி வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில், கடந்த 2 தினங்களாக மூச்சுத் திணறலால் பிரதீப்குமாா் அவதிப்பட்டாா். கோவை அரசு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டுச் செல்லப்பட்ட அவா் வழியிலேயே உயிரிழந்தாா். நீண்ட காலம் சிகிச்சையில் இருந்த பிரதீப்குமாா் உயிரிழந்ததையடுத்து, சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் மருத்துவமனை வளாகத்தில் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து துடியலூா் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து அவா்கள் சமாதானமாகினா். காவலா் இறப்பு குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.