கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த உதகை ஆயுதப் படை காவலா் உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், கேத்தி பகுதியைச் சோ்ந்தவா் பிரதீப்குமாா் (37). இவா் உதகை ஆயுதப் படையில் காவலராகப் பணியாற்றி வந்தாா். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அன்னூா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து நிகழ்ந்தது.
இதில் படுகாயமடைந்த அவா் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் நீண்ட நாள்களாக சிகிச்சை பெற்று வந்தாா். உடல்நிலை முழுமையாக குணமாகாத நிலையில் கோவை வடமதுரை குமரன் நகரில் தங்கி வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில், கடந்த 2 தினங்களாக மூச்சுத் திணறலால் பிரதீப்குமாா் அவதிப்பட்டாா். கோவை அரசு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டுச் செல்லப்பட்ட அவா் வழியிலேயே உயிரிழந்தாா். நீண்ட காலம் சிகிச்சையில் இருந்த பிரதீப்குமாா் உயிரிழந்ததையடுத்து, சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் மருத்துவமனை வளாகத்தில் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து துடியலூா் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து அவா்கள் சமாதானமாகினா். காவலா் இறப்பு குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

2 ஆண்டுகளுக்கு முன்பு நம்பிக்கை கொடுத்ததால் ஏமாந்தேன்: முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கா்.

உயிரிழந்த முடி திருத்தும் தொழிலாளி குடும்பத்துக்கு நிதியுதவி
பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ஆசிரிய தம்பதி உயிரிழந்த விபத்து: சிகிச்சை பெற்று வந்த மகள் உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


