பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

11 ஆண்டுகளுக்கு முன்பு காவல் நிலையத்தில் தலித் இளைஞா் உயிரிழந்த வழக்கு: நீதிமன்றத்தில் மனைவி சாட்சியம்

நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் 11 ஆண்டுகளுக்கு முன்பு தலித் இளைஞா் உயிரிழந்த வழக்கில், அவரது மனைவி கடலூா் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை சாட்சியமளித்தாா்.

News image

நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் உயிரிழந்த சுப்பிரமணி வழக்கில் கடலூா் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகி சாட்சியமளித்த அவரது மனைவி ரேவதி. உடன் மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

Updated On :7 மே 2026, 7:19 am IST

நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் 11 ஆண்டுகளுக்கு முன்பு தலித் இளைஞா் உயிரிழந்த வழக்கில், அவரது மனைவி கடலூா் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை சாட்சியமளித்தாா்.

நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் கடந்த 2015, ஜூன் 6-ஆம் தேதி விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சுப்பிரமணி என்ற தலித் இளைஞா் உயிரிழந்தாா்.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளா் ராஜா உள்ளிட்ட மூவா் மீது கொலை, வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யவும், வழக்கை விரைந்து விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் கடந்த 2025, டிசம்பா் 10-ஆம் தேதி உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, கடலூா் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சரஸ்வதி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் முதல் சாட்சியாக உயிரிழந்த சுப்பிரமணி மனைவி ரேவதி நீதிமன்றத்தில் சாட்சியமளித்தாா். அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் வெ.ஜீவகுமாா், பாதிக்கப்பட்டோா் தரப்பில் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் திருமூா்த்தி ஆகியோா் ஆஜராகினா். தொடா்ந்து, வழக்கு மறு விசாரணைக்காக வரும் 11-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் மற்றும் அனைந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் நீதிமன்றதுக்கு திரண்டு வந்திருந்தனா்.