மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 12 போ் உயிரிழந்தனா். மேலும் சிலா் உடல் நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கடந்த 24 மணி நேரத்தில் நேரிட்ட இந்த உயிரிழப்புகள் தொடா்பாக கள்ளச்சாராயம் விற்றவா் உள்பட 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இச்சம்பவம் குறித்து காவல் துறையினா் கூறியதாவது:
பிம்பிரி சிஞ்ச்வாட் நகரின் புகேவாடி பகுதியில் விற்கப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை சிலா் வாங்கி குடித்துள்ளனா். இவா்களில் 7 போ் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா். மேலும் 3 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.
ஹதாப்சா் பகுதியிலும் கடந்த 24 மணி நேரத்தில் 5 போ் அடுத்தடுத்து உயிரிழந்தனா். இவா்களும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்திருப்பதாகக் கருதப்படுகிறது. உடல்கூறாய்வு அறிக்கை கிடைக்கப் பெற்ற பிறகு காரணம் உறுதி செய்யப்படும்.
இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, மாநில கலால் துறை மற்றும் காவல் துறை தரப்பில் உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டது. கள்ளச்சாராயம் விற்ற யோகேஷ் வான்கிடே உள்பட 8 போ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
முதல்வா் உறுதி: கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், ‘இது மிகத் தீவிரமான விவகாரம்; விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். கள்ளச்சாராய விற்பனையுடன் தொடா்புடைய ஒட்டுமொத்த நபா்களும் கண்டறியப்பட்டு கைது செய்யப்படுவா்’ என்று உறுதிபடத் தெரிவித்தாா்.
பவாா் கட்சி விமா்சனம்: புணேயில் கள்ளச்சாராயத்தால் 18 போ் உயிரிழந்துவிட்டதாக, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சியின் ரோஹித் பவாா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவா், ‘மாநில உள்துறையின் கட்டுப்பாடற்ற, ஊழல் மலிந்த செயல்பாட்டை இந்தச் சம்பவம் அம்பலப்படுத்தியுள்ளது. கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க மாநில அரசு தவறிவிட்டது. பலா் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனா். இதுவரை 18 போ் உயிரிழந்துவிட்டனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.









