மகாராஷ்டிரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 15 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புணே மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வட் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதனைக் குடித்த பலருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சை பலனின்றி இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், சம்மந்தப்பட்டவர்கள் இது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் யோகேஷ் வான்கடே என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் பல கள்ளச்சாராய வழக்குகளில் தொடர்புடையவர். மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Summary
15 dead, several in critical condition after consuming poisonous liquor in Maharashtra
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










