பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 50 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 50 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

over 50 ips officers transferred

மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் - (கோப்புப் படம்)

Published On :

மகாராஷ்டிரத்தில், ஒரே நாளில் சுமார் 50 காவல் துறை உயர் அதிகாரிகள் (ஐபிஎஸ்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி மும்பை காவல் இணை ஆணையர் (குற்றம்) லக்ஷ்மி கௌதம், அம்மாநிலச் சிறப்பு காவல் ஆய்வாளர் ஜெனரலாக (ஐஜி) இடமாற்றம் செய்யப்பட்டார்.

கூடுதல் காவல் ஆணையர் (சட்டம் ஒழுங்கு) சத்யநாராயண் சௌதரி போக்குவரத்து பிரிவின் கூடுதல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், போக்குவரத்து பிரிவின் கூடுதல் ஆணையராகப் பணியாற்றிய அனில் கும்பாரே சட்டம் ஒழுங்கு பிரிவின் கூடுதல் காவல் ஆணையராகப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிறப்பு காவல் ஆய்வாளர் ஜெனரல் பதவி வகித்த 12த் ஃபெயில் படத்தின் நிஜ வாழ்க்கை அதிகாரி மனோஜ் குமார் சர்மா உள்ளிட்ட 7 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மனோஜ் குமார் சர்மா மகாராஷ்டிர தலைநகர் மும்பையின் சட்டம் ஒழுங்கு பிரிவின் கூடுதல் காவல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

In Maharashtra, approximately 50 senior police officers (IPS) have been transferred in a single day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.