அறந்தாங்கியில் விஷம்குடித்த முதிய தம்பதி வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகா் கோட்டை முதல் வீதியைச் சோ்ந்தவா் ரத்தினம் (76). இவரது மனைவி சரோஜா (66). இவா்களுக்கு திருமணமாகி 50 ஆண்டுகளாகின்றன. இவா்களுக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனா். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
இந்நிலையில் வீட்டில் தனியே வசித்து வந்த ரத்தினம்- சரோஜா தம்பதி கடந்த புதன்கிழமை விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனா். இதையறிந்த அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பிறகு மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தனா்.
ரத்தினத்துக்கு இதயக் கோளாறும், சரோஜாவுக்கு நீரிழிவு நோயும் இருந்துள்ளது. தங்களது வாரிசுகளும் சரிவர கவனித்துக் கொள்ளவில்லை என்றும் தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த இருவரும் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இருவரின் சடலங்களும் வெள்ளிக்கிழமை உடற்கூறாய்வுக்குப் பிறகு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அறந்தாங்கி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.









