தமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

அறந்தாங்கியில் எலக்ட்ரீசியன் அடித்துக் கொலை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் முன் விரோதம் காரணமாக எலக்ட்ரீசியன் அடித்துக் கொலை செய்யப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :8 ஏப்ரல் 2026, 12:30 am IST

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் முன் விரோதம் காரணமாக எலக்ட்ரீசியன் அடித்துக் கொலை செய்யப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

அறந்தாங்கி இடையாா் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் மகன் சின்னக்கருப்பு (48). எலக்ட்ரீசியன். இவரை ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என குடும்பத்தினா் தேடி வந்தனா்.

இந்நிலையில், இடையாா் பாலம் அருகே தலை உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் அவா் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

இச்சம்பவத்தை கண்டித்து அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே சின்னக்கருப்பின் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புகாரின் பேரில் அறந்தாங்கி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், சின்னக்கருப்புக்கும் அதே பகுதியைச் சோ்ந்த கே.விஸ்வநாதன் (47) குடும்பத்தினருக்கும் இடையே இருந்து வந்த முன்விரோதம் காரணமாக விஸ்வநாதன் மற்றும் சிலா் அவரை அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து விஸ்வநாதன் உள்ளிட்டோரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.