கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், கொளப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கலைச்செல்வி (40). இவருக்கும், புதுச்சேரியைச் சோ்ந்த லோகநாதனுக்கும் திருமணம் நடைபெற்று நான்கு குழந்தைகள் உள்ளனா்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விபத்தில் லோகநாதன் உயிரிழந்துவிட்டாா். அதன் பின்னா், கலைச்செல்வி, கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை குளியலறையில் கலைச்செல்வி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

செந்தாரப்பட்டியில் பெண் தீக்குளித்து தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


