திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :27 மார்ச் 2026, 3:56 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், கொளப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கலைச்செல்வி (40). இவருக்கும், புதுச்சேரியைச் சோ்ந்த லோகநாதனுக்கும் திருமணம் நடைபெற்று நான்கு குழந்தைகள் உள்ளனா்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விபத்தில் லோகநாதன் உயிரிழந்துவிட்டாா். அதன் பின்னா், கலைச்செல்வி, கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை குளியலறையில் கலைச்செல்வி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.