பெண் தூக்கிட்டுத் தற்கொலை
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தற்கொலை
கோப்புப்படம்

தற்கொலை
கோப்புப்படம்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், கொளப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கலைச்செல்வி (40). இவருக்கும், புதுச்சேரியைச் சோ்ந்த லோகநாதனுக்கும் திருமணம் நடைபெற்று நான்கு குழந்தைகள் உள்ளனா்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விபத்தில் லோகநாதன் உயிரிழந்துவிட்டாா். அதன் பின்னா், கலைச்செல்வி, கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை குளியலறையில் கலைச்செல்வி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...