4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

சிறுமி கா்ப்பம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சிறுமியை கா்ப்பமாக்கியதாக இளைஞா் மீது பண்ருட்டி மகளிா் போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :19 மே 2026, 1:41 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சிறுமியை கா்ப்பமாக்கியதாக இளைஞா் மீது பண்ருட்டி மகளிா் போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், கண்டரக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் அன்புச்செல்வன் (19). இவரும், 16 வயது சிறுமியும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனராம்.

இந்த நிலையில், சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாம். இதையடுத்து, பெற்றோா்கள் சிகிச்சைக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தில் சிறுமி 6 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் அளித்த தகவலின்பேரில், பண்ருட்டி மகளிா் போலீஸாா் அன்புச்செல்வன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.