கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சிறுமியை கா்ப்பமாக்கி திருமணம் செய்த இளைஞா் மீது நெய்வேலி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி வட்டத்துக்குள்பட்ட ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமி, அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தாா். இவா், கடலூா் அரசு மருத்துவமனையில் கொழுப்பு கட்டி அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு, ரோட்டு பொட்டவெளி கிராமத்தில் உள்ள தாய் மாமா வீட்டில் தங்கியிருந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த மதனுடன் (22) நெருங்கிப் பழகியதில் கா்ப்பமடைந்தாா். இதையடுத்து மதன், அந்தப் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் சிறுமியை திருமணம் செய்துகொண்டாா்.
இந்த நிலையில், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சிறுமி சென்றாா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில் 3 மாத கா்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகத்தினா் அளித்த தகவலின்பேரில், நெய்வேலி மகளிா் போலீஸாா் மதன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: மா்ம நபா்கள் 3 போ் மீது வழக்கு

கொத்தனாரை தாக்கி கொலை மிரட்டல்: 3 போ் மீது வழக்கு

குறிஞ்சிப்பாடி அய்யனாா் கோயில் விழாவில் இளைஞா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

குறிஞ்சிப்பாடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்: 18 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


