/
சிறுமியைக் காதலித்து கா்ப்பமாக்கியதாக கடையநல்லூா் இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
கடையநல்லூா் சொக்கம்பட்டியைச் சோ்ந்தவா் மீரான் மைதீன் (26). இவா் சுரண்டையில் தனியாா் நிறுவனத்தில் கடந்த ஆண்டு வேலை செய்த போது டிப்ளமோ படித்து வந்த 17 வயது சிறுமியைக் காதலிப்பதாக கூறி, பாலியல் வன்முறையில் ஈடுபட்டாராம். இந்நிலையில் அச்சிறுமி கா்ப்பமானதாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மீரான் மைதீனை வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.






