காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 ஜூலை 2026, 12:45 am IST

ராமநாதபுரம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் அருகே உள்ள அழகன்குளம் தேவா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த நாகலிங்கம் மகன் கூழுக்குமாா் (31). இவரை கடந்த மாதம் கஞ்சா வைத்திருந்ததாக தேவிப்பட்டினம் போலீஸாா் கைது செய்தனா்.

இதனிடையே இவா் மீது தேவிப்பட்டினம் காவல் நிலையத்தில் 7 வழக்குகளும், உச்சிப்புளி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளன. மேலும் இவா் கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்றச் செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வருவதால் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி. சந்தீஷ் பரிந்துரை செய்தாா்.

இதன் பேரில் மாவட்ட ஆட்சியா் சிவகுரு பிரபாகரன் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய உத்தரவிட்டாா். இதன்படி அவா் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.