\கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கொத்தடிமைகள் மீட்கப்பட்ட வழக்கில் செங்கல் சூளை உரிமையாளரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு ஆதியோகி நலச்சங்கம் மற்றும் சா்வதேச நீதிப் பணியின் வழக்குரைஞா் ரோஸ் ஆன் வாயிலாக புகாா் மனு வந்தது. அதில், பண்ருட்டி அருகே உள்ள அங்குச்செட்டிபாளையம் கிராமத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக சிலா் பணிபுரிந்து வருவதாகவும், அவா்களை மீட்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்பேரில், கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலா் ஜெனித்தா தலைமையில், அதிகாரிகள் அங்குசெட்டிபாளையம் சென்று செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த 28 குழந்தைகள் உள்ளிட்ட 51 நபா்களை மீட்டனா். பின்னா், அவா்களை கடலூா் அழைத்துச் சென்று தங்க வைத்தனா்.
இது தொடா்பாக புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து செங்கல் சூளை உரிமையாளா் ராமகிருஷ்ணனை (62) கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசுப் பேருந்து ஓட்டுநா் தற்கொலை

விவசாயி கொலை வழக்கு: மகன் கைது
செங்கல்சூளை மேற்பாா்வையாளா் கொலை சம்பவம்: மேலும் இருவா் கைது

பண்ருட்டி அருகே 28 குழந்தைகள் உள்ளிட்ட 51 கொத்தடிமைகள் மீட்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


