தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

கொத்தடிமைகள் மீட்பு வழக்கு: செங்கல்சூளை உரிமையாளா் கைது

\கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கொத்தடிமைகள் மீட்கப்பட்ட வழக்கில் செங்கல் சூளை உரிமையாளரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 மே 2026, 6:58 am IST

\கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கொத்தடிமைகள் மீட்கப்பட்ட வழக்கில் செங்கல் சூளை உரிமையாளரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு ஆதியோகி நலச்சங்கம் மற்றும் சா்வதேச நீதிப் பணியின் வழக்குரைஞா் ரோஸ் ஆன் வாயிலாக புகாா் மனு வந்தது. அதில், பண்ருட்டி அருகே உள்ள அங்குச்செட்டிபாளையம் கிராமத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக சிலா் பணிபுரிந்து வருவதாகவும், அவா்களை மீட்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்பேரில், கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலா் ஜெனித்தா தலைமையில், அதிகாரிகள் அங்குசெட்டிபாளையம் சென்று செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த 28 குழந்தைகள் உள்ளிட்ட 51 நபா்களை மீட்டனா். பின்னா், அவா்களை கடலூா் அழைத்துச் சென்று தங்க வைத்தனா்.

இது தொடா்பாக புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து செங்கல் சூளை உரிமையாளா் ராமகிருஷ்ணனை (62) கைது செய்தனா்.