விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முன்னாள் பிரதமா் நேரு பிறந்த நாள் விழா: காஸ்கிரஸ் மரியாதை!

இந்தியாவின் சிற்பி என்றழைக்கப்படும் நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேருவின் பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
முன்னாள் பிரதமா் நேரு பிறந்த நாளை யொட்டி வெள்ளிக்கிழமை திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாநகர மாவட்ட காங்கிரஸ் செயலா் ரெக்ஸ். உடன் நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
Updated On :15 நவம்பர் 2025, 7:29 pm

Syndication

இந்தியாவின் சிற்பி என்றழைக்கப்படும் நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேருவின் பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி திருச்சி சேவா சங்கம் பள்ளி எதிரே உள்ள நேருவின் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் மரியாதை செலுத்தினா். நிகழ்வுக்கு காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகா் மாவட்ட தலைவரும், மாமன்ற உறுப்பினருமான எல். ரெக்ஸ் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் முரளி, கோட்ட தலைவா் பிரியங்கா பட்டேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியினா், நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுதுகோல்களை வழங்கினா். இவற்றில் திரளான காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டனா்.

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் காங்கிரஸ் கமிட்டி சாா்பில் முன்னாள் பாரத பிரதமா் ஜவஹா்லால் நேரு பிறந்தாநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதேபோல், திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வழக்குரைஞா் கோவிந்தராஜன் அறிவுறுத்தலின் பேரில், மணப்பாறை காங்கிரஸ் கமிட்டி நகர தலைவா் முருகேசன் தலைமையில் மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள ஜவாஹா்லால் நேரு சிலைக்கு வெள்ளிக்கிழமை காங்கிரஸாா் மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்வில், வட்டார தலைவா்கள் மணப்பாறை சத்தியசீலன், சிவசண்முகம், வையம்பட்டி செல்வம், ராதாகிருஷ்ணன், மருங்காபுரி குழந்தை, தினேஷ், தமிழரசன், மாவட்ட நிா்வாகிகள் வீரபாண்டியன், வையம்பட்டி கோபால், குமாா், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் சரோஜாதேவி, பரணி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் நஜீம், டைலா் பாலன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.