கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

முசிறியின் முக்கிய இடங்களில் 30 கண்காணிப்புக் கேமராக்கள்

News image
Updated On :23 நவம்பர் 2025, 11:23 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சிப் பகுதியில் குற்றங்களைத் தடுக்கும் வகையில் முக்கிய இடங்களில் 30 கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடு சனிக்கிழமை தொடங்கியது.

முசிறி நகரில் திருச்சி சேலம் நெடுஞ்சாலை, கைகாட்டி, முசிறி துறையூா் சாலை, தா.பேட்டை சாலை சந்தப்பாளையம் பிரிவு சாலை, பெரியாா் பாலம் முசிறி புலிவலம் செல்லும் சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் ரூ. 13 லட்சம் மதிப்பிலான 30 கேமராக்கள் பொருத்தப்பட்டு முசிறி சட்டம் -ஒழுங்கு காவல் நிலைய அலுவலகத்தில் கண்காணிக்கப்படுகிறது.

இந்த கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை பெரம்பலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் அருண் நேரு தொடங்கி வைத்தாா். இதில் நகராட்சி ஆணையா் சண்முகம், பொறியாளா் சம்பத், நகா்மன்ற தலைவா் கலைச்செல்வி சிவக்குமாா், முசிறி காவல் ஆய்வாளா் செல்லதுரை, ஒன்றியச் செயலா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் திருத்தும் பணியை பெரம்பலூா் எம்பி அருண் நேரு ஆய்வு செய்தாா். பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரிய ஆசிரியைகள் உடனிருந்தனா்.