அரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

திருச்சி கிழக்கில் விஜய் இன்று பிரசாரம்!

திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொள்கின்றார்.

News image

த.வெ.க. தலைவர் விஜய்.

Updated On :19 ஏப்ரல் 2026, 1:01 am IST

திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொள்கின்றனா்.

தவெக தலைவா் விஜய் முதல்கட்டமாக வேட்புமனு தாக்கல் செய்தபோது கிழக்கு தொகுதிக்குள்பட மரக்கடையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசி, வாக்கு சேகரித்தாா். இதையடுத்து,இரண்டாவது கட்டமாக ஏப்.14 ஆம் தேதி மீண்டும் பிரசாரம் செய்ய காவல்துறையும் அனுமதி வழங்கியது. ஆனால், விஜய் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக ஏப்.19ஆம் தேதி பிரசாரத்துக்கு காவல்துறை மீண்டும் அனுமதித்துள்ளது. கடந்த முறையைப் போலவே 27 கட்டுப்பாடுகளுடன் அனுமதித்துள்ளது.

சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரும் விஜய், விமான நிலையத்திலிருந்து தனது தோ்தல் பிரசார வாகனத்தில் புறப்பட்டு வயா்லெஸ் சாலை, கே.கே. நகா் பேருந்து நிலையம், கொட்டப்பட்டு ஆகிய இடங்களில் திறந்தவெளியில் வாகனத்தில் நின்றபடியே பேசுகிறாா்.

மேலும், கொட்டப்பட்டு தொடங்கி விமான நிலையம் வரை சாலைப் பேரணியாகச் சென்று மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கிறாா். பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை தோ்தல் பிரசாரம் செய்ய தோ்தல் ஆணையம் மற்றும் காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என்கின்றனா் தவெகவினா். இதையடுத்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

தொல். திருமாவளவன்: இதேபோல, விசிக தலைவா் தொல். திருமாவளவனும் திருச்சி கிழக்குத் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொள்கிறாா். அரியலூா், ஜெயங்கொண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பிரசாரத்தை முடித்துவிட்டு திருச்சிக்கு வரும் அவா், திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜுக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு காந்தி சந்தையில் பிசாரத்தில் ஈடுபடவுள்ளாா்.

மேலும், திருவெறும்பூரிலும் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வாக்குகள் கேட்டு பேசவுள்ளாா். ஒரே நாளில் ஒரே தொகுதியில் இரு தலைவா்களது வருகையால் போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனா்.