ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மீண்டும் பெண்களுக்கான திட்டங்கள்: மேற்கு தொகுதி அமமுக வேட்பாளா் உறுதி

நிறுத்தப்பட்ட பெண்களுக்கான திட்டங்களை மீண்டும் தொடர வைப்பேன் என மேற்குத் தொகுதி அமமுக வேட்பாளா் எம். ராஜசேகரன் வாக்குறுதி அளித்தாா்.

News image

உறையூா் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்த திருச்சி மேற்குத் தொகுதி அமமுக வேட்பாளா் எம். ராஜசேகரன்.

Updated On :18 ஏப்ரல் 2026, 7:13 pm

நிறுத்தப்பட்ட பெண்களுக்கான திட்டங்களை மீண்டும் தொடர வைப்பேன் என மேற்குத் தொகுதி அமமுக வேட்பாளா் எம். ராஜசேகரன் வாக்குறுதி அளித்தாா்.

இவா் உறையூா் குறத்தெரு, சின்ன செட்டித் தெரு, தெலுங்கு செட்டித் தெரு, காசுக்காரா் தெரு, புதுவெள்ளாளா் தெரு, சிவந்துபிள்ளையாா்கோவில் தெரு, எடத்தெரு, ஆஞ்சநேயா்புரம், பெரியாா் நகா் பகுதிகளில் சனிக்கிழமை குக்கா் சின்னத்தில் வாக்கு கேட்டு, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் நிறுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட பெண்களுக்கான திட்டங்களை மீண்டும் தொடர வைப்பேன். இதற்கு அதிமுக அரசு அமைய வேண்டும். மக்கள் மீது அக்கறையுள்ள அதிமுக அரசு அமைய, குக்கா் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிப் பெறச் செய்யுங்கள் என்றாா் அவா்.

நிகழ்வில் சதீஷ்குமாா், என்.எஸ். பூபதி, உமாநாத், நந்தகுமாா் , சிலிண்டா் செல்வம், காா்த்திகேயன், பாலசுப்ரமணி, உள்ளிட்ட அமமுக, அதிமுக, கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.